தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரத்தில், சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டலம் ஆசீர்வாதபுரம் பரி. பேதுரு ஆலய பிரதிஷ்டை விழா இன்று திருமண்டல லே செயலர் டி.எஸ்.ஜெயசிங் தலைமையில் நடைபெற்றது. பிரதம பேராயர் தர்மராஜ் ரசலம் முன்னிலை வகித்தார். நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் திறந்து வைத்து பிரதிஷ்டை செய்தார். சிறப்பு விருந்தினர்களாக கொல்லம் கொட்டாரக்கரை பேராயர் ஓமன் ஜார்ஜ் , திருமண்டல குருமார்கள், திரு மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் வழிபாட்டுத் தலங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இப்பகுதியில் இந்த புதிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். புதிய பேராயர் எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடியவர் என்று லேச் செயலாளர் ஜெயசிங் தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை சேகர பொதுமக்கள் செய்திருந்தனர்.