காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.

மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் எ

Update: 2021-08-30 17:52 GMT

ராணிப்பேட்டையில் காவலர்களுக்கான தியானப் பயிற்சியை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் தொடக்கி வைத்தார்.

ராணிப்பேட்டையில் காவலர்களுக்கான தியானப் பயிற்சியை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் தொடக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த காவலர்களுக்கான தியானப்பயிற்சி முகாம் நடைபெற்றது. ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை மாவட்ட எஸ் பி தீபாசத்தியன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: தற்போது காவலர்கள் பணியின் நிமித்தமாகவும், குடும்ப சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். சமுதாயத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுறிவருகின்றனர். எனவே அவர்களின் மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் என்றார். நிகழ்ச்சியில், டிஎஸ்பி பூரணி,தனிப்பிரிவு எஸ்ஐ.சிதம்பரம், வசந்த், மேலும் ,பயிற்சி வழங்கும் தொண்டு அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News