இராணிப்பேட்டை மாவட்டத்தில் 752 பேர் வேட்பு மனுதாக்கல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி , பேரூராட்சிகளில் தேர்தலில் போட்டியிட இதுவரை 752 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இது வரை 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தம் 752 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுருமான பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுவரை வேட்புமனு தாக்கல்
அரக்கோணம் நகராட்சியில் 133,
ஆற்காட்டில் 75,
மேல்விஷாரத்தில் 99,
இராணிப்பேட்டை 97,
சோளிங்கர் 81,
வாலாஜா 26, என நகராடாசிகளில் 511மனுக்கள்
மற்றும் பேரூராட்சிகளான அம்மூர் 51,
கலவை 22,
காவேரிப்பாக்கம் 38,
நெமிலி 16,
பணப்பாக்கம் 8,
தக்கோலம் 44,
திமிரி 32,
விளாப்பாக்கத்தில் 30 என 241 மனுக்கள் தற்போது வரை வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.