இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.

இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து தாலூகா அலுவலகங்களில் ஜூலையில் ஜமாபந்தி நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2021-06-23 07:15 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை ஆகிய தாலூக்காக்கள் உள்ளன. அவற்றில் ஆண்டு தோறும் ஜமாபந்தி நடந்து வருகிறது . ஜமாபந்தியின் போது, பொது மக்கள் வழங்கும் பட்டா பெயர் மாற்றம், சான்றிதழ் சம்பந்தமான மனுக்கள் உள்பட அனைத்தையும் விரைந்து விசாரித்து தீர்வு செய்யப்படும்.

அதன்படி, 2020-21க்கான 1,430ஆம் பசலிக்கான தீர்ப்பாயத்தின் படி வரும் ஜூலை 1,2,6 ஆகிய தேதிகளில் வாலாஜா மற்றும் சோளிங்கரிலும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கலவை தாலூகா, நெமிலி, அரக்கோணம், ஆற்காட்டில் நடக்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார் மேலும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக வழங்காமல் Https://GDP.tn.in/jamabandhi என்ற ஆன்லைன் முகவரிக்கு 1.7.2021 வரை மனுவை விண்ணப்பக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News