200 திருநங்கைகளுக்கு 4 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்
இராணிப்பேட்டை் அடுத்த சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நல்லத்தம்பி திருநங்கைகள் 200 பேருக்கு ரூ 4 லட்சம் மதிப்பில் அரிசி,மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி,இவர் அப்பகுதியில் பிரதீப் இன்ஜினியரிங் கம்பெனியை நடத்திவருகிறார் சமூக ஆர்வலராகவும் உள்ளார்.
இந்நிலையில். கொரோனா ஊரங்கில் வருமானமின்றி சிக்கராஜபுரம். அதைச்சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் குறித்து கேட்டறிந்து, ₹400000 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகுப்பை 200 திருநங்கைகளுக்கு தொழிலதிபர் நல்லத்தம்பி வழங்கினார. அவருடன் சமூக ஆர்வலர் தீனா கலந்து கொண்டார்.