மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு
மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மத்திய மண்டலத்தில் மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து சிறப்பாக செயல்பட்ட, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பார்த்திபன், தலைமை காவலர் மாரிமுத்து, முதல்நிலைக் காவலர் கார்த்திக், மற்றும் தினேஷ் மற்றும் காவலர் மணிகண்டன் ஆகியோரை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.