வீட்டுமனை பட்டா வழங்கிட 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் அருகே மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்கிட பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Update: 2021-07-13 06:00 GMT

வீட்டுமனை பட்டா வழங்கிட மறவநத்தம் மக்கள் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

பெரம்பலூர் அருகே உள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த 130 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2005ல் வீட்டுமனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு இதுவரை பட்டா வழங்காததால் பெரும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், நத்தம் மனைவரி பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News