உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய மரகன்றுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் வழங்கினர்.

Update: 2021-05-01 06:30 GMT

 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் விவசாயிகளின் வயலுக்கு நேரடியாக சென்று விவசாயிகளின் உழைப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக பயன்தரக் கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்கனி, புங்கை உள்ளிட்ட  மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் வழங்கினர்.

மேலும் நாட்டின் உயிர் மூச்சாக விளங்க கூடிய விவசாயத்தில் எந்த சுயநலம் பாராமல் அல்லும் பகலும் மக்கள் பசியை போக்க உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மரகன்றுகளை வழங்கியதாக நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News