லப்பைக்குடிகாடு பேரூராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி

லப்பைக்குடிகாடு பேரூராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி நிறைவு பெற்றது.

Update: 2021-09-25 01:45 GMT

குன்னம் வட்டம் லப்பைகுடிகாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைகுடிகாடு பேரூராட்சியில், செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் முன்னிலையில், தமிழக அரசின் ஆணைப்படி, சுற்றியுள்ள வடிகால் வாய்க்கால்களையும், மழைநீர் செல்லும் வாய்க்கால்களையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள வடிகால்கள் தூய்மைப்படுத்தப்படன.

இந்த மாபெரும் சிறப்பு முகாம் மூல், மழைக்காலங்கள் வருவதற்கு முன்பே, மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை செய்த  தொழிலாளர்கள், ஊழியர்கள், செயல் அலுவலருக்கும் லப்பைகுடிகாடு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News