நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்ப மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கினார்கள்.

Update: 2021-12-16 04:19 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற   உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.சார்பில் போடடியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. விருப்ப மனு பெற்றவர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளர்  மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரனிடம், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர்,அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் கழகத்தின் சார்பில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ஏராளமானோர் விருப்ப மனு வழங்கினார்கள்.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் நகர செயலாளருமான எம். பிரபாகரன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொருளாளர் செ.இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் எம்வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், சேகர், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News