தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 180 நகை கடைகள் மூன்று மணிநேரம் அடைக்கப்பட்டு நகைகடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-08-23 06:38 GMT

பெரம்பலூரில் தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக் கடை உரிமையாளர்கள் கடையை அடைத்து ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூரில் தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக் கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடையை அடைத்து,சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் பெரம்பலூர் கடைவீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்

மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 180 நகை கடைகள் மூன்று மணிநேரம் அடைக்கப்பட்டன, இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட நகை கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். 

Tags:    

Similar News