பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-04-21 05:04 GMT

கொள்ளை நடத்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரம்பலூர் மதன கோபாலபுரம்,ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர், ராதாகிருஷ்ணன்,ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது55,) இவரது மகன் உதயசங்கர் தென் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்து வருகிறார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கிருத்திகா மற்றும் இரண்டு மகன்களை அழைத்து கொண்டு தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் மகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் உள்ள தனது மகள் உமாராணி வீட்டிற்கு பெரம்பலூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை எதிர் வீட்டில் குடி இருப்பவர்கள் மகேஸ்வரிக்கு போன் செய்து உங்களது வீடு கதவு திறந்து இருக்கிறது  என தகவல் தெரிவித்தனர், மகேஸ்வரி பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் இரு அறைகளில் வைக்கப்பட்டிருந்த பீரோ அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும்,வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், சம்பவம் அறிந்த பெரம்பலூர் நகர காவல் நிலைய போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்து,திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News