கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் மார்ச் 21ம்தேதியாகும். 6 வயது முடிந்த இருபாலரும் முதலாம் வகுப்பில் சேர தகுதியுடையவர்.

Update: 2022-03-12 07:15 GMT

பெரம்பலூரில் இயங்கி வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் கடந்த 28ம்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் மார்ச் 21ம்தேதியாகும். 6 வயது முடிந்த இருபாலரும் முதலாம் வகுப்பில் சேர தகுதியுடையவர். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் கேந்திரியா வித்யாலயா பள்ளியின்www.perambalur.kvs.ac.in மற்றும்https://kvsangathan.nic.in என்ற இணையதளங்களை பார்வையிட்டு பயன்பெறலாம். பள்ளி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். வரும் 25ம்தேதி சேர்க்கைக்கு தகுதியுடைவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும், எனவே பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News