நாமக்கல் மாவட்டத்தில் 6 பிடிஓக்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் 6 பிடிஓக்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-05 05:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 பிடிஓக்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், ஊராட்சி வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக நலன்கருதி கலெக்டர் ஸ்ரேயா சிங் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி எலச்சிபாளையம் பிடிஓ (கிராம ஊராட்சி) தனபால் கொல்லிமலைக்கும், அங்கு பணியாற்றி வந்த புஷ்பராஜன் (கிராம ஊராட்சி) எலச்சிபாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்படனர். கொல்லிமலையில் பணியாற்றி வந்த பிடிஓ சரவணன் பரமத்திக்கும், அங்கு பணியாற்றி வந்த தனம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சத்திரத்தில் பணியாற்றி வந்த பிடிஓ சரவணன், கொல்லிமலைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதேபோல் மருத்துவ விடுப்பில் இருந்த பள்ளிபாளையம் பிடிஓ கிரிஜா திருச்செங்கோடு பிடிஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News