நாமக்கல் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம்: புதிய நிர்வாகிகள் தேர்தல்

நாமக்கல் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-04-18 01:45 GMT

கோப்பு படம் 

நாமக்கல் நகரில் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான டிரெய்லர் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சங்கத்தின், புதிய தலைவராக சின்னுசாமி, செயலாளராக தாமோதரன், பொருளாளராக சுப்பிரமணியம், துணைத் தலைவராக கிருஷ்ணமூர்த்தி, உப தலைவராக செல்வம், இணைச் செயலாளராக பரமசிவம், துணை செயலாளராக விஜய் ஆகியோர் வெற்றிபெற்றனர். தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News