நாமக்கல்லில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் இலவச பயிற்சி துவக்கம்

நாமக்கல்லலில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் துவங்குகிறது.

Update: 2021-12-02 12:15 GMT

பைல் படம்.

நாமக்கல்லலில் வரும் 6ம் தேதி பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் துவங்குகிறது.

இதுகுறித்து இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு, பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 6ம் தேதி துவங்குகிறது.

இப்பயிற்சி முகாம் 13 வேலை நாட்களுக்கு நடைபெறுகிறது. பயிற்சிக்கு 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும், பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேனீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப் படும்.

விண்ணப்பங்களை நாமக்கல், திருச்சி மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 4ம் தேதிக்குள் நேரில் வந்து பூர்த்தி செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News