சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

நாமக்கல்லில், மாநில சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.

Update: 2022-05-12 09:00 GMT

நாமக்கல்லில் சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசும் மாணவி.

தமிழக அரசின் மாநில சிறுபான்மை ஆணையத்தின் மூலம், மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்ட சிறுபான்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், தமிழாசிரியர் சசிகலா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். திரளான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். மாவட்ட அளவில் முதல் 3 இடம் பெற்றவர்கள் சென்னையில் வருகிற ஜூன் 3ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள தேர்வு பெற்றனர்.

Tags:    

Similar News