நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் மீட்பு

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் மீட்பு

Update: 2021-10-23 23:45 GMT

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

நாமக்கல் - மோகனூர் ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி எதிரில் வசித்து வருபவர் சக்ரவர்த்தி (43). இன்ஜினியர். இவர் கடந்த 19-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அடுத்த காலையில் பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி எஸ்.ஐ சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடி வந்தார்.

இந்தநிலையில், மோகனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பி.வெள்ளாளபட்டியை சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார் (21), திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் பிரவின்ராஜ் (22), ஏர்போர்ட் முஸ்லிம் தெருவை சேர்ந்த சலீம் பாஷா மகன் முகமது ரியாஸ் (22) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து, சக்ரவர்த்தியின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையொட்டி 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

Tags:    

Similar News