நாமக்கல்லில் முத்திரை தாள் விற்பனையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

நாமக்கல்லில் முத்திரை தாள் விற்பனையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-25 03:37 GMT

நாமக்கல்லில் முத்திரை தாள் விற்பனையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், துறையூர் முத்திரைத்தாள் விற்பனையாளர் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், அரசு தட்டுப்பாடின்றி முத்திரைத்தாள்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இ ஸ்டாம்ப் விற்பனை உரிமையை முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில், சங்கத்தின் புதிய தலைவராக ஜெயபால், செயலாளராக சாதிக் பாட்ஷா, பொருளாளராக வெங்கடாஜலபதி, கவுரவத் தலைவராக கந்தசாமி, சட்ட ஆலோசகராக வக்கீல் ராதா மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல், பரமத்தி வேலூர், மோகனூர், எருமப்பட்டி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் குரு நன்றி கூறினார்

Tags:    

Similar News