புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பி.ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (38), அவரது மனைவி திவ்யா. தங்கதுரை அங்கு உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த தங்கதுரை, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து, புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.