நாமக்கல் மாவட்டத்தில் இன்று 25ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 25ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 377 மையங்களில் நடைபெறுகிறது.

Update: 2022-03-19 00:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட 15,15,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,36,841 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9,24,130 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 24 மெகா தடுப்பூசி முகாம்களில் 7,41,221 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். 25ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று 19ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், முனிசிபாலிட்டிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 356 நிலையான முகாம்கள் மூலமாகவும் 21 நடமாடும் குழுக்கள் மூலமாகம் மொத்தம் 377 முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று, இதுவரை ஒரு தவணை தடுப்பூசிகூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து, இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News