நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,391 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-06-13 07:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே, நடைபெற்ற 29 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 8,16,144 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று 30-வது கட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 2,766 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்களில் மொத்தம் 20,391 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News