சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாவட்ட ஆட்சியர் தகவல்.

Update: 2021-12-14 02:45 GMT

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி, படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) படிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் இண்டர்நெட் மூலம் ஸ்காலர்ஷிப்.டிஎன்.ஜிஓவி.இன் என் வெப்சைட்டில் நாளை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News