நாமக்கல் அண்ணா பிறந்த நாள் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.

Update: 2022-09-15 11:45 GMT

நாமக்கல்லில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற, மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

நாமக்கல் மெயின் ரோட்டில் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற, அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி சுந்தரம், நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர தி.மு.க. செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், மாநில நிர்வாகிகள் மணிமாறன், நக்கீரன், மாயவன், கவுன்சிலர்கள் சரவணன், இளம்வழுதி, தி.மு.க. பிரமுகர்கள் ராஜகோபால், பிரபு, சென்னிமலை உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News