நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவகம் துவக்கம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் குழு சிறுதானிய உணவகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்துப் பார்வையிட்டார்
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அனுமதியின் பேரில், மகளிர் சுய உதவிக்குழு மூலம் சிறு தானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் துறை அலுவலர்களுக்கும், பல்வேறு பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் சத்தான சிறு தானிய உணவு வகைகளை வழங்கும் வகையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு, உணவகத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். திரளான மகளிர் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.