நாமக்கல் அருகே கட்டிட பணியின்போது மண் சரிவு: 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

நாமக்கல் அருகே கட்டிட பணியின்போது மண்சரிந்து புதைந்த 2 தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

Update: 2022-03-25 14:30 GMT

நாமக்கல் அருகே கட்டிட பணிகளை மேற்கொள்ளும் போது மண்சரிந்து, மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் அடுத்துள்ள நல்லிபாளையத்தில் விஜயகுமார் என்பவர் வீட்டிற்கு அஸ்திவாரம் பறிக்கும் பணியில் இன்று காலை முதல் கட்டிட தொழிலாளிகளான முதலைப்பட்டியை சேர்ந்த சின்னுசாமி மற்றும் தாதம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 10 அடி அளவில் குழி பறித்த போது தொழிலாளிகள் சின்னுசாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மீது மண் சரிந்து குழிக்குள் புதைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், அப்பகுதியினர் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டார்.‌ இருப்பினும் மீட்க முடியாததால் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுற்றியுள்ள மண்ணை அகற்றி அவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கடும் முயற்சியில் ஈடுபட்டு உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News