நாமக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
நாமக்கல்லில் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டக் கூட்டுறவுத்துறை சார்பில், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு டிசிஎம்எஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் இணைப்பதிவாளர் விஜயசக்தி தலைமை வகித்துப் பயிற்சியை துவக்கி வைத்தார்.
பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், பயிற்சி நிலைய முதல்வர் விஜயகணபதி, மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.