மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் உதவியார் என கூறி ரூ.10.80 லட்சம் மோசடி

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் என கூறி, மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 10.80 லட்சம் மோசடி.

Update: 2021-12-08 11:00 GMT

பைல் படம்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இன்ஜினியரிங் பட்டதாரியான இவரிடம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர், தனது மகன் மேகவர்மன், மாஜி அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக பணிபுரிவதாகவும், ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தால், அவர் மூலம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி, மேகவர்மன் வங்கி கணக்கில் இரண்டு தவணையாக ரூ. 8 லட்சமும், நேரில் ரூ. 2.80 லட்சமும் கார்த்திக் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கார்த்திக் ஏற்கனவே திருச்செங்கோடு போலீசில் புகார் அளித்தள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்போது, மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது பணத்தை திருப்பிப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News