திட்டப்பணிகளில் சிறந்த செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர் பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதைப் பாராட்டி கலெக்டருக்கு, முதல்வர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
தமிழக கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 2021ம் ஆண்டில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.