தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியில் நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை.

Update: 2022-03-24 12:45 GMT

பைல் படம் 

இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளத்திற்கு குறைவாக வழங்குதல், குறிப்பிட்ட கால நிர்ணயம் இல்லாமல் நீண்ட நேரம் வேலை வாங்குவது, அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்களுக்கு முன்பணம் வழங்கி அவர்களிடம் கூடுதல் வேலை வாங்குவது, ஈமச்சடங்கிற்கு கூட குடும்பத்தினரை சென்று பார்க்க அனுமதிக்காதது, உடல் சார்ந்த வன்முறைக்கு தொழிலாளர்களை உட்படுத்துவது, போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தால் அத்தொழிலாளி கொத்தடிமை தொழிலாளியாவார்.

கொத்தடிமைகளாக நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தொழிலாளர் உதவி௮+ கமிஷனர் (அமலாக்கம்) மற்றும் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் தெரிவிக்கலாம். 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். மேலும் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் உரிமையாளர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளுக்கு குறையாத வகையில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Tags:    

Similar News