பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் வாரிசுகளுக்கு பணிஆணை: அமைச்சர் வழங்கல்

பணியின்போது உயிரிழந்த மின் வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 6 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Update: 2022-01-26 00:00 GMT

பணியின்போது உயிரிழந்த மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில்,  பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ. ஆகியோர்.

நாமக்கல் கோட்ட மின்சார வாரியத்தில், பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்கள் 6 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிபட்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகள் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News