கொங்குநாடு பி.எட் கல்லூரி சார்பில் 7 நாட்கள் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியின் என்எஸ்எஸ் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.

Update: 2022-06-14 11:45 GMT

தோளூர்ப்பட்டியில் நடைபெற்ற, கொங்குநாடு பி.எட் கல்லூரி, என்எஸ்எஸ் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாமில், கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி பேசினார்.

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியின் என்எஸ்எஸ் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.

கொங்குநாடு பி.எட் கல்லூரி என்எஸ்எஸ் திட்டத்தின் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், தோளூர்ப்பட்டியில் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாம் துவக்க விழாவிற்கு கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் பெரியசாமி தலைமை வகித்தார். தோளூர்ப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி சரவணன், துணைத்தலைவர் சரஸ்வதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார்கள். கல்லூரி முதல்வர் நாகராஜன், தொட்டியம் பிரபு, மற்றும் வார்டு உறுப்பினர்கள் திளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக என்எஸ்எஸ் திட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முடிவில் மாணவர் சிவனேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News