தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு

நாமக்கல் அருகே பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-09-15 12:00 GMT

கோப்புப்படம் 

நாமக்கல் நல்லிபாளையம் அடுத்த எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கண்ணன் (45),இவரது மனைவி சசிகலா (28). இவர்கள் இருவரும், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு, பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். அவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.வி.எஸ்.சி. படித்து வருகிறார். ஆசிரியர் சசிகலா திருப்பதி சென்று விட்டார். அடுந்த நாள் காலை, 8.30 மணிக்கு, ஆசிரியர் கண்ணன் பள்ளிக்கும், அவரது மகள் கல்லூரிக்கும் சென்று விட்டு, மாலை, 6.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். கேட்டை திறந்துபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகை திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News