பொருளாதாரத்தை உயர்த்த பொங்கல் பரிசு - தங்கமணி

Update: 2021-01-05 05:00 GMT

பொருளாதாரத்தை உயர்த்தவே பொங்கல் பரிசு திட்டமும் ரூ.2500 பணமும் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கொரோனா காலம் என்பதால் தற்போது வேலைவாய்ப்பு குறைவாக இருந்த காரணத்தால் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் நல்ல எண்ணத்தில் ரூ.2500 வழங்கியுள்ளார். இதனை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து முதலமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். அவரவர் கட்சியை வளர்ப்பதற்காக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கோவையில் திமுக நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு அந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Tags:    

Similar News