விடியல் ஆரம்பம் அமைப்பினர் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து சென்றனர்

விடியல் ஆரம்பம் சார்பில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்களை ஈரோடு புத்தக கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்

Update: 2022-08-13 16:00 GMT

குமாரபாளையம் நாராயணநாகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களை விடியல் ஆரம்பம் நிர்வாகி பிரகாஷ் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு அழைத்து சென்ற போது, புத்தகஸ் கண்காட்சி அமைப்பாளர் ஸ்டாலின் குணசேகரன் மாணவர்களை வாழ்த்தினார்.

விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

குமாரபாளையம் நாராயணநாகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களை விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் நிர்வாகி பிரகாஷ் தலைமையில் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள ஒவ்வொரு அரங்கத்தையும் காண வைத்து, புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டது. புத்தக கண்காட்சி அமைப்பாளர், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் மாணவரர்களை நேரில் சந்தித்து புத்தகங்கள் படிப்பதன் அவசியம் குறித்து பேசி வாழ்த்தினார். தலைமை ஆசிரியை பாரதி, கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்கள் ஈரோடு செல்ல வாகன வசதியை பொதுநல ஆர்வலரும், எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி தலைவர் மற்றும் கல்வியாளருமான ரவீந்திரன் செய்திருந்தார். அவருக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.



Tags:    

Similar News