நாமக்கல் மாவட்ட தி.மு.க.செயலாளரை வரவேற்க குமாரபாளையத்தில் ஏற்பாடு

குமாரபாளையத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளரை வரவேற்க இரவு பகலாக அலங்கார ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-02 15:30 GMT

குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மதுரா செந்திலை வரவேற்க கொடி அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

தி.மு.க.வின் பதினைந்தாவது உள் கட்சி தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி நாமக்கல் மாவட்ட தி மு க. செயலாளராக மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட செயலாளராக தேர்வான பின்னர் மதுரா செந்தில்  முதன் முதலாக  குமாரபாளையம் வருகிறார்.

இவரை வரவேற்க தி.மு.க. நகர செயலாளர் செல்வம் தலைமையில் ஒரு அணியினரும், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் ஒரு அணியினரும் கத்தேரி பிரிவு முதல், காவேரி பழைய பாலம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு இரு புறமும், நூற்றுக்கணக்கான தி.மு.க. கொடிக்கம்பங்கள், பிளெக்ஸ் பேனர்கள், என அலங்கரித்து வருகின்றனர். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வரவேற்பு வழங்க மேடையும் போடப்பட்டு உள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க இருப்பதால், அந்த சாலை முழுதும் கொடி, தோரணங்கள் அலங்காரம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

Tags:    

Similar News