குமாரபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு 16 விருதுகள்
குமாரபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு 16 விருதுகள் வழங்கப்பட்டன.
ரோட்டரி சங்கம், நாமக்கல் எஜுகேசனல் சிட்டி இணைந்து சுபம் விருதுகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் சுந்தரலிங்கம், மாவட்ட செயலர் ஜாகிர் அகமது, விழா தலைவர் மகேஸ்வரன் மற்றும் முன்னாள் ஆளுனர்கள் முன்னிலையில் சிறந்த சங்க செயல்பாடு, சமுதாய சேவைகள், கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், சிறந்த குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம், சிறந்த மண்டல செயலர் செயல்பாடு, மற்றும் சிறப்பு சேவைத்திட்ட செயல்பாடுகளுக்கான 16 விருதுகள் குமாரபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு 16 விருதுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட நிர்வாக தலைவர் சிவசுந்தரம், மண்டல துணை ஆளுனர் அர்த்தநாரீஸ்வரன், சங்க தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.