தடுப்பூசி முகாம் : 200% இலக்கை எட்டி " சபாஷ்" வாங்கிய காஞ்சி மாவட்டம்

தடுப்பூசி செலுத்துவதில் 200 சதவீத இலக்கை எட்டி காஞ்சி மாவட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Update: 2021-09-12 15:45 GMT

இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் காட்சிகள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் 602 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  29,746 நபர்களுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டடது.

இதற்க்கான தகுந்த எண்ணிகையில் செவிலியர்களும், தகவல் பதிப்பாளர்களும்,  பயனாளிகளை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுந்த பணியாளர்கள் , மருத்துவம், உள்ளாட்சி, சத்துணவு, பள்ளிகல்வித்துறை மற்றும் வருவாய்துறையைச் சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி பணியில் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.

இந்த மொகா தடுப்பூசி முகாமில் தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இலக்கு 29,246 தாண்டி 200% சதவீதம் எண்ணிக்கையான  60,040 நபர்களை எட்டியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்க்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாடு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பின் மூலம் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால். இலக்கை தாண்டி தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் - 17380 பேர். , உத்திரமேரூர் - 10987 பேர், வாலாஜாபாத் - 7966 பேர், ஸ்ரீபெரும்புதூர் - 13284 பேர், குன்றத்தூர் - 19370 பேர்.

மாவட்ட ஆட்சியர் மருத்துவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் , மாவட்ட தடுப்பூசி முகாம் கண்பாணிப்பளரோ முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் என மும்முனை கூட்டணி செயல்பாடுகள் காஞ்சிபுரத்தை வெற்றி கூட்டணியாக்கியுள்ளது. இதற்கு உறுதுணை புரிந்த அத்தனை நபர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News