காஞ்சிபுரம்: சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் தும்பவனத்தம்மன்
காஞ்சிபுரத்தில் தும்பவனத்தம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற தும்பவனம் பகுதியில் உள்ள தும்பவனத்தம்மன் ஆலய 26 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவில் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் செய்திருந்தார்,
சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. யு .எஸ். சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள் கோல்ட் ரவி என். பி. ஸ்டாலின், கோல்ட் மோகன், 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேம்குமார், பகுதி கழக துணைச் செயலாளர் சரண், வட்டச் செயலாளர் தமிழரசன், வடக்கு பகுதி பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.