ஏடிஎம்மில் தவறவிட்ட ரூ.20 ஆயிரம் பணத்தை எஸ்.பியிடம் ஒப்படைத்த இளம்பெண்

ATM ல் இருந்த 20,000 ரூபாயை எஸ்பி எம்.சுதாகர் முன்னிலையில் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த இளம்பெண் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2022-03-30 12:45 GMT

ஏடிஎம் ல் தவறவிட்ட பணத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த இளம்பெண் பிரியா.

காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் மேட்டுத்தெருவில் உள்ள ATM ல் பணம் எடுக்க கடந்த 28ம் தேதி அன்று இரவு பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம்மில் ரூ.20.000 இருந்ததை கண்டார்.

அந்த பணத்தை இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் M.சுதாகரை சந்தித்து அவரிடம் பணத்தை ஒப்படைத்து அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் இயங்கும் HDFC வங்கி கிளை மேலாளர் திவாகர் மற்றும் பழனி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவரிடம் பணத்தை பிரியாவின் மூலம் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்குமாறு கூறினார். அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் செயல்பட்ட பிரியாவின் செயலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.

Tags:    

Similar News