காஞ்சிபுரத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் இறந்தவரின் உடலை பெற 5 நாட்களாக அலைக்கழித்த பாலுசெட்டிசத்திரம் காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

Update: 2021-05-08 11:45 GMT

காஞ்சிபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா(54). இவர் விநாயகபுரம் பகுதியில் நடந்து சென்ற போது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை மீட்டு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

வசந்தாவின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு, விபத்து சான்றிதழை இறந்தவரின் மகன் ஆட்டோ டிரைவர் தான்தோனிக்கு 5 நாட்களுக்கும் மேலாக தராமல்  சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு அலைக்கழித்து  வந்தார்.

இது குறித்து தகவல் நமது தளத்திலும், நாளிதழ், தொலைகாட்சியில் வெளியாகியதை தொடர்ந்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை காஞ்சிபுரம் எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News