பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் குளிர்பானங்கள் வழங்கல்

Update: 2021-04-10 10:00 GMT

காஞ்சிபுரம் நகர அதிமுக சார்பில் கோடை காலத்தினையொட்டி பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் , பழங்கள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடை காலத்தில் பொதுமக்களுக்கு வெப்பத்தைத் தணிக்கும் வகையில் மோர், குளிர்பானங்கள், பழ வகைகள் வழங்க அதிமுகவினருக்கு உத்தரவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோடை காலம் துவங்கியதும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு மோர், குளிர்பானங்கள், பழவகைகள் அளிப்பது வழக்கம். அவ்வகையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக காஞ்சி நகர அதிமுக சார்பில் தேரடியில் இன்று துவக்கவிழா நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளரி, தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகளும் மோர், ஆரஞ்சு, ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களும் இளநீர் மற்றும் அன்னதானம் போன்றவைகளும் வழங்கும் விழாவினை மாவட்ட செயலாளர்கள் சோமசுந்தரம் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News