காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே சாரைப் பாம்பு, பிடித்த தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியாக விளங்குவது மூங்கில் மண்டபம். இப்பகுதி அருகிலுள்ள டீக்கடை அருகே உள்ள மர வேர் அருகே ஏதோ பொருள் அசைவதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிந்தனர்.
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்தபோது சாரை பாம்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர். பாம்பு பிடி கருவிகள் உதவியுடன் பாம்பை லாவகமாக பிடித்து வெளியே எடுத்தனர். பிடிபட்ட சாரை பாம்பு 7அடி நீளம் இருந்ததால் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.