ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.5% வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.

Update: 2021-10-09 04:45 GMT

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது . 

காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 369099 மொத்த வாக்கில் 21522 ஆண்களும்,17253 பெண்கள் என 38775 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 10.5% வாக்குப் பதிகும். அனைத்து வாக்குசாவடிகளும் வாக்களர்கள் வாக்களிக்க காத்திருப்பது  குறிபிடதக்கது.

Tags:    

Similar News