வாலாஜாபாத் அருகே நடந்த சிலிண்டர் விபத்து பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை

Fire Accident -தேவரியம்பாக்கம் சிலிண்டர் விபத்து வழக்கு தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-09-30 01:44 GMT

 தீ விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்

Fire Accident -காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வந்த சிலிண்டர் 
குடோனில் சிலிண்டர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது.இதில் ஆறு ஆண்கள் 5 பெண்கள் ஒரு குழந்தைகள் என மொத்தம் 12 பேர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 அவர் ஊர்த்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் அதி தீவிர தீப்புண் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததில் இருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

விபத்து தொடர்பாக கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, ஜீவானந்தன் , பொன் வளவன் , மனோஜ் குமார் ஆகிய ஐந்து பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஒரகடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News