தோல்வி பயம் காரணமாக அதிமுகவினரின் வேட்பு மனு நிராகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

உள்ளாட்சித்தேர்தல் பயம் காரணமாக அதிமுகவினரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்வதாக எடப்பாடிபழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்

Update: 2021-09-25 06:15 GMT

காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி

வகைகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு  பேசுகையில்,  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். திமுக பொய் வாக்குறுதிகள் அளித்து செயல்படுத்த இயலாமல் தவிக்கிறது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயம் காரணமாக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களை அதிகாரம் எனும் ஆயுதத்தால் தள்ளுபடி செய்கிறது. ஆகவே நமது ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு கேளுங்கள் என்றார் அவர்.

Tags:    

Similar News