எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணத்தில் ரேஷன் கடைகள்
பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், நியாயவிலை கடைகள் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.
ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்களை, தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கி வருகிறது. அதன்படி, அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை என பல்வேறு பொருட்களை நிபந்தனைகள் பேரில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
தற்போது ஆட்சி மாற்றம் கண்ட நிலையில், கிராம ஊராட்சி கடைகளின் வண்ணத்தை மாற்றியுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், இத்தகைய பணி மேற்கொள்ளப்படுகிறது. எப்படியாவது கட்டிடம் புதுப்பொலிவு பெறுவதாலும், எளிதில் கடையை அடையாளம் காண முடியும் என்பதாலும், பொதுமக்கள் இதை வரவேற்றுள்ளனர்.