பெருநகர் : நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு காவல்துறை விசாரணை

பெருநகர் குட்டை நீரில் 13 வயது சிறுமி தவறி விழுந்து மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-05 14:00 GMT

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் வட்டம், தினையாம்பூண்டி கிராமம்,   பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் யாழினி (13) அருகில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் காலை இயற்கை உபாதைகளுக்காக வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பாததால் அவரைத் தேடியபோது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தை தேங்கியிருந்த நீரில் முகம் புதைத்தபடி மிதந்து உள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது யாழினி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ‌‌

இச்சம்பவம் குறித்து பெருநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதல்கட்டமாக அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.


Tags:    

Similar News