காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம்
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பெருமாளுக்கு பூ மாலைகள் சூட்டி அழகு பார்ப்பதையே தொழிலாக கொண்டிருந்தவர் பெரியாழ்வார். இவரது அவதார தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் உற்சவர் அழகிய சிங்கப் பெருமாளுக்கும்,அம்ருதவலில்லித் தாயாருக்கும் காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் அழகிய சிங்கப்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்திலும், அம்ருத வல்லித் தாயார் சிகை அலங்காரத்திலும், பெரியாழ்வார் வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்திலும் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பெரியாழ்வார் பாடிய பாடல்கள் பாடப்பட்டு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.