பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்

Update: 2022-02-09 05:00 GMT

காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஷம்ஷாத் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரிக்கும் காட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்கள் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் பெண் முஸ்லிம் வேட்பாளரான எஸ்.ஷம்ஷாத் ஆசிரியர் நகர் , அரசு நகர் பகுதிகளில் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி,பெண் வேட்பாளருக்கு குங்குமம் அளித்து காலில் விழுந்து ஆசி பெற்று வாக்கு சேகரித்து வருகிறார்.

முஸ்லிம் பெண் வேட்பாளர் அனைத்து பெண்களுக்கும் குங்குமம் அளித்த வாக்கு கேட்கும் நூதன முறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News